Wednesday, 21 December 2016

     மதியில் மட்டுமன்றி  மனம் முழுவதும்  மாலதியே  நிறைந்து  என்னை குழப்பினாள் . அவளுக்கு  உதவவேண்டும் என்று  மனம் கூறியது , உதவிக்கு சென்றால் ஆபத்து என்று மதி அச்சுறுத்தியது . மதிக்கும்  மனதுக்கும் மத்தியில்  மிக பெரிய போராட்டம் .








Friday, 1 January 2016

KANEERIL KARAIGENREN

                                                      

                                                       கவிதை 

                               

                    கண்ணீரில்  கரைகின்றேன் 

                                                                      K . Indira


குமரியாக  இருந்த போது  என்னில்
  குறை ஒன்றும்  தெரியவில்லை  உனக்கு
குரல் இனிது  குருள் இனிது  என்று
    குழைந்து  குழைந்து  பேசினாய்

கன்னி  என்னை  சுற்றி வட்டமிட்டு அலைந்தாய்
     கன்னம்  சிவக்க  புகழ்ந்தாய்
கண்களில் நீர் வரும் வரை சிரிக்க விட்டு
     காதல் கதைகள்  பல சொன்னாய்

 இன்றும்  என் கண்கள் நீரை  சிந்துகின்றன
    இன்னொருத்தி  உன் வாழ்வில் வருவாளோ  என்ற அச்சத்தில்
இன்று பாவை நான் காயாய்  கசக்கின்றேன்
     இருந்தும்  இல்லாமல் இயலாமையில்   வாழ்கின்றேன்

 மனைவியாக  ஆனா பின் மங்கை நான் கசக்கின்றேன்
    முடிந்ததெல்லாம்  செய்தாலும்  முகம் சுளிகின்றாய்
முன்பு  பேசிய  சொற்கள் எல்லாம் மணாளன் நீ  மறந்தாலும்
       மனதில் நிறைந்து மறைந்து போக மறுக்கின்றன

பிள்ளை இல்லை என்று என்னை ஓதிக்கிவிட்டாய்
    பாசமாய்  பெற்றவன் இல்லை என்றால் என்ன
பள்ளியில்  முப்பது முகம் எனக்காக  ஏங்குமே
     பாடம் சொன்னதால்  பாசமாக  பேசுமே

அனாதையாக  திரிபவனை  ஆதரித்தால்  போதாதோ
     அத்தை என்பவனை  தத்து எடுத்தால் ஆகாதோ
அத்தான்  உனக்கு நான்  எனக்கு நீ  என்று
    அன்பாய் காலம்  கடத்தினால்  போகாதோ ........
                                கொஞ்சும்  யோசி  ப்ளீஸ் ........



                                                           
                                                          
































































































































Saturday, 19 December 2015

10 second kathaigal

1]   தன்  தாய்  செய்த  கை முறுக்கை  விற்றுகொண்டிருந்தான்  கைகள் இல்லாத சிறுவன்
2]  முதியோர்  இல்லத்தில் அவர்கள் நலனை கேட்டுகொண்டிருந்தவள்ளுக்காக  வீட்டில் எதிர்பார்த்து கொண்டிருந்தாள் வயதான உடல் நலமற்ற  மாமியார்























































Thursday, 12 March 2015

என்   டைரயிலிருந்து  சில காகிதங்கள்
     



























































Tuesday, 6 November 2012

                பட்டு  மாமியும்   முத்து மாமாவும்



       மண்      பொன்
             மனநிறைவு  





மாமி;     அந்த எதிர்த்தாத்து .தம்பி  மறுபடியும்                                வேலைவிட்டுட்டானாம்

மாமா;   எதிர்பார்த்த்துதானே.   இந்த காலத்துல                           வாங்க சம்பளம் யாருக்குமே  போதலை.                         அதனால  குரங்கு மாதிரி ஒரு                                               வேலையிலிருந்து இன்னோன்னுக்கு                               தாவுராங்க . 


மாமி;   அது மட்டுமா... அதிகமா சம்பளம் வர                                ஆரம்பிச்சதும்  அத என்ன பன்றதுன்னு                            தெரியாம மண்    பொன்னு  வாங்கறாங்க                        மனநிறைவு தொலைக்கிறாங்க.


1--     உள்ளத்தில்   நிறைவு  இல்லத்தில் அமைதி 
                   தருமே  நல்ல  தூக்கம் 

2--      பசியென்றோற்கு   பகிர்ந்தளித்து  தானூண்டு                      வாழ்பவன்   அறிவானே  மனஅமைதி 

3--     காருண்டு  பணமுண்டு  கண்ணாடி வீடுண்டு 
               கண்ணுறங்க  வில்லை  கண்ணாளன் 

4--     
































































Tuesday, 13 March 2012

வாங்க சிரிக்கலாம்

          பட்டு  மாமியும்  முத்து மாமாவும்



  மாமா;  பட்டு  நான் வரைஞ்ச  காகிதம் இங்க வைச்சேன்                         நீ  பார்த்தியா?  
  மாமி;    அது நீங்க வரைஞ்ச படமா!  நான்    காபி 
                       கொட்டிடுத்தோன்னு  நினைத்து  அந்த                                       காகித்தை    கிழிச்சுபோட்டுட்டேன்
      

மாமா;         வெங்காயம் வெட்ட  அவ்வளவு                                              கஷ்டப்படனுமா கண்ணுலேர்ந்து                                            தண்ணியாகொட்டுது
மாமி ;           வெங்காயம் இல்லை ஒரு மண்ணும்                                      இல்லை     உங்க நச்சரிப்பு  தாங்க                                          முடியாம நிசமாவே  அழறேன்       






மாமா ;  பல் டாக்டருக்கிட்ட போயிட்டு  வரும்போது நெஞ்சை பிடிச்சிகிட்டு ஏன் வர?
 மாமி ;  அவர் கேட்ட ஃபீ  நினைச்சு  நெஞ்சை  அடைக்குது                                                                                

Wednesday, 8 February 2012

தாத்தாவும் பேரனும்

                                  புதுகுறள்  புதுகுரலில்
                                    2--தாத்தாவும்     பேரனும்
                பட்டு மாமியும்   முத்து  மாமாவும்


மாமி ;  உங்க நண்பருடைய  மகனும்  மருமகளும்  தனிகுடித்தனம் போறாளாமே.  நிசமா?

மாமா;  மாமியாருக்கும்   மருமகளுக்கும்  ஒத்துபோகலையாம்   அதனால தனிகுடித்தனம்.
                                   மாமி ;       பாவம் அந்த பேரன்




1 --தாத்தாகதை   சொல்ல  பாட்டிசோறூட்ட  என்ன
         தவம்  செய்தானோ    அந்த பேரன்
2--தாய்தந்தை  திரும்புவரை  தனித்திருந்து  வாடி
          தவிக்கவேண்டுமோ  தவபுதல்வன்
3--பார்த்துபார்த்து வளர்த்தவரும்   பாரமாவாரோ
             பக்குவம்  வந்தபின்     பிள்ளைக்கு
4--  கணவன்தேவை  அவன்தந்த  குழந்தைதேவை  ஆனால்
            அவனைதந்த  அவர்கள்வேண்டாம்  அவளுக்கு
5--  குழந்தையாக  அத்தையை  நாடிஓடியவளுக்கு  
              குமரியானதும் அத்தை  வேப்பம்காயாம்
6-- அத்தை என்ன சொத்தையா  அட்டகாசம் செய்வாள்
            உத்தமியான   மருமகளுடன்

7--    பேத்தியை பாசம்  கொண்டாட  பர்மிசன்
                 தேவை அந்த பாட்டிக்கு
 8--  மனைக்கு  இருகதவுகளாம் தாயும் தாரமும்
              இரண்டும்  அவசியம் அன்றோ!!!
   மாமா ;  பராவாயில்லையே   நல்லாவே  கவிதை சொல்ற