Wednesday, 8 February 2012

தாத்தாவும் பேரனும்

                                  புதுகுறள்  புதுகுரலில்
                                    2--தாத்தாவும்     பேரனும்
                பட்டு மாமியும்   முத்து  மாமாவும்


மாமி ;  உங்க நண்பருடைய  மகனும்  மருமகளும்  தனிகுடித்தனம் போறாளாமே.  நிசமா?

மாமா;  மாமியாருக்கும்   மருமகளுக்கும்  ஒத்துபோகலையாம்   அதனால தனிகுடித்தனம்.
                                   மாமி ;       பாவம் அந்த பேரன்




1 --தாத்தாகதை   சொல்ல  பாட்டிசோறூட்ட  என்ன
         தவம்  செய்தானோ    அந்த பேரன்
2--தாய்தந்தை  திரும்புவரை  தனித்திருந்து  வாடி
          தவிக்கவேண்டுமோ  தவபுதல்வன்
3--பார்த்துபார்த்து வளர்த்தவரும்   பாரமாவாரோ
             பக்குவம்  வந்தபின்     பிள்ளைக்கு
4--  கணவன்தேவை  அவன்தந்த  குழந்தைதேவை  ஆனால்
            அவனைதந்த  அவர்கள்வேண்டாம்  அவளுக்கு
5--  குழந்தையாக  அத்தையை  நாடிஓடியவளுக்கு  
              குமரியானதும் அத்தை  வேப்பம்காயாம்
6-- அத்தை என்ன சொத்தையா  அட்டகாசம் செய்வாள்
            உத்தமியான   மருமகளுடன்

7--    பேத்தியை பாசம்  கொண்டாட  பர்மிசன்
                 தேவை அந்த பாட்டிக்கு
 8--  மனைக்கு  இருகதவுகளாம் தாயும் தாரமும்
              இரண்டும்  அவசியம் அன்றோ!!!
   மாமா ;  பராவாயில்லையே   நல்லாவே  கவிதை சொல்ற

No comments:

Post a Comment