Tuesday, 6 November 2012

                பட்டு  மாமியும்   முத்து மாமாவும்



       மண்      பொன்
             மனநிறைவு  





மாமி;     அந்த எதிர்த்தாத்து .தம்பி  மறுபடியும்                                வேலைவிட்டுட்டானாம்

மாமா;   எதிர்பார்த்த்துதானே.   இந்த காலத்துல                           வாங்க சம்பளம் யாருக்குமே  போதலை.                         அதனால  குரங்கு மாதிரி ஒரு                                               வேலையிலிருந்து இன்னோன்னுக்கு                               தாவுராங்க . 


மாமி;   அது மட்டுமா... அதிகமா சம்பளம் வர                                ஆரம்பிச்சதும்  அத என்ன பன்றதுன்னு                            தெரியாம மண்    பொன்னு  வாங்கறாங்க                        மனநிறைவு தொலைக்கிறாங்க.


1--     உள்ளத்தில்   நிறைவு  இல்லத்தில் அமைதி 
                   தருமே  நல்ல  தூக்கம் 

2--      பசியென்றோற்கு   பகிர்ந்தளித்து  தானூண்டு                      வாழ்பவன்   அறிவானே  மனஅமைதி 

3--     காருண்டு  பணமுண்டு  கண்ணாடி வீடுண்டு 
               கண்ணுறங்க  வில்லை  கண்ணாளன் 

4--     
































































Tuesday, 13 March 2012

வாங்க சிரிக்கலாம்

          பட்டு  மாமியும்  முத்து மாமாவும்



  மாமா;  பட்டு  நான் வரைஞ்ச  காகிதம் இங்க வைச்சேன்                         நீ  பார்த்தியா?  
  மாமி;    அது நீங்க வரைஞ்ச படமா!  நான்    காபி 
                       கொட்டிடுத்தோன்னு  நினைத்து  அந்த                                       காகித்தை    கிழிச்சுபோட்டுட்டேன்
      

மாமா;         வெங்காயம் வெட்ட  அவ்வளவு                                              கஷ்டப்படனுமா கண்ணுலேர்ந்து                                            தண்ணியாகொட்டுது
மாமி ;           வெங்காயம் இல்லை ஒரு மண்ணும்                                      இல்லை     உங்க நச்சரிப்பு  தாங்க                                          முடியாம நிசமாவே  அழறேன்       






மாமா ;  பல் டாக்டருக்கிட்ட போயிட்டு  வரும்போது நெஞ்சை பிடிச்சிகிட்டு ஏன் வர?
 மாமி ;  அவர் கேட்ட ஃபீ  நினைச்சு  நெஞ்சை  அடைக்குது                                                                                

Wednesday, 8 February 2012

தாத்தாவும் பேரனும்

                                  புதுகுறள்  புதுகுரலில்
                                    2--தாத்தாவும்     பேரனும்
                பட்டு மாமியும்   முத்து  மாமாவும்


மாமி ;  உங்க நண்பருடைய  மகனும்  மருமகளும்  தனிகுடித்தனம் போறாளாமே.  நிசமா?

மாமா;  மாமியாருக்கும்   மருமகளுக்கும்  ஒத்துபோகலையாம்   அதனால தனிகுடித்தனம்.
                                   மாமி ;       பாவம் அந்த பேரன்




1 --தாத்தாகதை   சொல்ல  பாட்டிசோறூட்ட  என்ன
         தவம்  செய்தானோ    அந்த பேரன்
2--தாய்தந்தை  திரும்புவரை  தனித்திருந்து  வாடி
          தவிக்கவேண்டுமோ  தவபுதல்வன்
3--பார்த்துபார்த்து வளர்த்தவரும்   பாரமாவாரோ
             பக்குவம்  வந்தபின்     பிள்ளைக்கு
4--  கணவன்தேவை  அவன்தந்த  குழந்தைதேவை  ஆனால்
            அவனைதந்த  அவர்கள்வேண்டாம்  அவளுக்கு
5--  குழந்தையாக  அத்தையை  நாடிஓடியவளுக்கு  
              குமரியானதும் அத்தை  வேப்பம்காயாம்
6-- அத்தை என்ன சொத்தையா  அட்டகாசம் செய்வாள்
            உத்தமியான   மருமகளுடன்

7--    பேத்தியை பாசம்  கொண்டாட  பர்மிசன்
                 தேவை அந்த பாட்டிக்கு
 8--  மனைக்கு  இருகதவுகளாம் தாயும் தாரமும்
              இரண்டும்  அவசியம் அன்றோ!!!
   மாமா ;  பராவாயில்லையே   நல்லாவே  கவிதை சொல்ற

Sunday, 5 February 2012

இல்லறமே நல்லறமாம்

             புதுகுறள்     புதுகுரலில்
                      1-- இல்லறமே    நல்லறமாம்
 பட்டு மாமியும்   முத்து மாமாவும்
மாமி:  ஏன்னா   அந்த  எதிர்த்தாத்து  தம்பியும்  அவன் மனைவியும்
                 பிரிய போறாளாம்   தெரியுமோ?
மாமா;  என்ன காரணமாம்?
மாமி;   காரணம்  ஒன்னா ரெண்டா

  1---சிணுங்கினான்,  முக்கை  சிந்தினான்,  சிக்கரமாய் தூங்கினான்
                 பல காரணங்களாம்   இல்லறம் கெட
 2--- மன்னிப்போம்  மறப்போமென்பதை   மறந்துவாழ்கிறார்
                மதம் கொண்டு   மனிதர்  பலர்
 3- மனைவியன்றி   பிற மங்கை  தங்கை என்றுண்ர்ந்தவனுக்கு
                 மறைந்து  போகுமே வீண் துயரம்
 4 - மனவாழ்வில்  வெற்றிபெற   மனைவிமணாளன் சேர்ந்து
        முயன்றால்  முடியாது என்பதில்லை
  5-   பொருளுடன்    இறைஅருளும் தேவை  இவ்வுலகில
                   இல்லறம்  வெற்றியாய்  நடத்த  
     6-முதுமையில்  இளமைகாண  மனநிறைவு  போதும 
                        மற்றதெல்லாம்  மாசுக்கு  சமம்
     7-- மனவறைமுதல் மடியும்வறை   தூயஅன்பிருந்தால்
                        மகிழ்ச்சிதானாக      நிலைக்காதோ
      8---மனைவிக்கும்  மனமுண்டு  என்றுணரும்  மாந்தருக்கு
                         மனைவியே  உயிருட்டும்   அமிழ்தாவாள்
மாமா ;  சரி தான்  இத்தன காரணங்கள் இருந்தா பாவம்  அவா மட்டும் என்ன  செய்வாள் !!!