Sunday, 5 February 2012

இல்லறமே நல்லறமாம்

             புதுகுறள்     புதுகுரலில்
                      1-- இல்லறமே    நல்லறமாம்
 பட்டு மாமியும்   முத்து மாமாவும்
மாமி:  ஏன்னா   அந்த  எதிர்த்தாத்து  தம்பியும்  அவன் மனைவியும்
                 பிரிய போறாளாம்   தெரியுமோ?
மாமா;  என்ன காரணமாம்?
மாமி;   காரணம்  ஒன்னா ரெண்டா

  1---சிணுங்கினான்,  முக்கை  சிந்தினான்,  சிக்கரமாய் தூங்கினான்
                 பல காரணங்களாம்   இல்லறம் கெட
 2--- மன்னிப்போம்  மறப்போமென்பதை   மறந்துவாழ்கிறார்
                மதம் கொண்டு   மனிதர்  பலர்
 3- மனைவியன்றி   பிற மங்கை  தங்கை என்றுண்ர்ந்தவனுக்கு
                 மறைந்து  போகுமே வீண் துயரம்
 4 - மனவாழ்வில்  வெற்றிபெற   மனைவிமணாளன் சேர்ந்து
        முயன்றால்  முடியாது என்பதில்லை
  5-   பொருளுடன்    இறைஅருளும் தேவை  இவ்வுலகில
                   இல்லறம்  வெற்றியாய்  நடத்த  
     6-முதுமையில்  இளமைகாண  மனநிறைவு  போதும 
                        மற்றதெல்லாம்  மாசுக்கு  சமம்
     7-- மனவறைமுதல் மடியும்வறை   தூயஅன்பிருந்தால்
                        மகிழ்ச்சிதானாக      நிலைக்காதோ
      8---மனைவிக்கும்  மனமுண்டு  என்றுணரும்  மாந்தருக்கு
                         மனைவியே  உயிருட்டும்   அமிழ்தாவாள்
மாமா ;  சரி தான்  இத்தன காரணங்கள் இருந்தா பாவம்  அவா மட்டும் என்ன  செய்வாள் !!!

No comments:

Post a Comment